திருப்பூர்: கார் கண்ணாடியை உடைத்து ரூ.35,000 பணம் திருட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடி சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. ராயம்பாளையம் பகுதியை சேர்ந்த பரமசிவம் LIC முகவராக பணியாற்றி வருகிறார். பாலிசிதாரர்களிடமிருந்து வசூலித்த 35 ஆயிரம் பணத்தை காரில் வைத்துவிட்டு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பரமசிவம் அளித்த புகாரின்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் கல் வீசி காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. 

varient
Night
Day