தருமபுரி: காதல் விவகாரத்தில் இளைஞருக்கு குத்திகுத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி அருகே காதல் விவகாரத்தில் இளைஞரை ஓட ஒட துரத்தி கத்தியால் குத்திய நபர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெசவாளர் காலனியைச் சேர்ந்த கவியரசன் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதே பெண்ணை நரசங்குளம் பகுதியைச் சேர்ந்த சிவகுருவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இலக்கியம்பட்டி பகுதிக்கு சென்ற கவியரசனிடம், சிவகுருவும் அவரது நண்பர்கள் 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் சிவகுரு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கவியரசனை குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து சென்ற தருமபுரி டவுன் போலீசார் கவியரசனை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, தப்பியோடிய 3 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day