தஞ்சை: நகை அடகு கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நகை அடகு கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு கொள்ளையர்கள் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுக்கூரில் கடந்த 15 ஆண்டுகளாக ராஜேந்திரன் என்பவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் காலை கடையை திறந்து பார்த்தபோது கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர், மோப்பநாய் நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து சோதனை நடத்தி தப்பிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

varient
Night
Day