தஞ்சை : இறால் பண்ணை உரிமையாளர் கொலை - 4 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே புகார் அளிக்‍க சென்ற நபரை கொலை செய்த வழக்‍கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

பசுபதி கோயில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ள செந்தில்குமாருக்‍கும் அப்பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பவருக்‍கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செந்தில் குமார் அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அதன்மீது போலீசார் நடவடிக்‍கை எடுக்‍க தீவிரம் காட்டி வந்தார். இதுதொடர்பாக செந்தில்குமார் தனது உறவினர் ஜெயக்‍குமார் மற்றும் நண்பர் பிரவீன்குமாருடன் காரில் கால்நிலையத்திற்கு சென்றபோது, 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்‍கியது. இதில் ஜெயக்‍குமார் மருத்துவமனைக்‍கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காவல்துறையினர் விசாரணை நடத்தி இவ்வழக்‍கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர். மேலும் 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Night
Day