தஞ்சாவூர்: செல்போன், பணத்திற்காக இளைஞர் கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே குடிபோதையில் இருந்த நபரை கொலை செய்துவிட்டு செல்போன், பணத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். வடக்கு தெருவை சேர்ந்த பிரகாஷ் என்பவர் வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறி சென்ற நிலையில் இரவு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பிரகாஷை தேடிய போலீசார் சடலமாக மீட்டனர். பின்னர் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது  மதுபோதையில் இருந்த பிரகாஷை இருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வது பதிவாகியிருந்தது. இதனையடுத்து ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்நீதி, பிரவீன் ஆகிய இருவரை கைது செய்த போலீசால் விசாரித்து வருகின்றனர்.

Night
Day