க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
சென்னை திருவிக நகரில் மாமியாரை கிண்டல் செய்த நபரை, மருமகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவிக நகரை சேர்ந்த மோகன் என்பவர், மீன் மார்க்கெட் நடைபாதையில் உறங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் மோகனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட ஸ்ரீதர், வினோத் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஸ்ரீதரின் மாமியாரை மோகன் கிண்டல் செய்ததால், தனது நண்பர் வினோத்துடன் சேர்ந்து மோகனை வெட்டியது தெரியவந்தது.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...