க்ரைம்
பெரம்பலூர் - ரூ.1.50 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
சென்னை திருவிக நகரில் மாமியாரை கிண்டல் செய்த நபரை, மருமகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவிக நகரை சேர்ந்த மோகன் என்பவர், மீன் மார்க்கெட் நடைபாதையில் உறங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் மோகனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட ஸ்ரீதர், வினோத் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஸ்ரீதரின் மாமியாரை மோகன் கிண்டல் செய்ததால், தனது நண்பர் வினோத்துடன் சேர்ந்து மோகனை வெட்டியது தெரியவந்தது.
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி