சென்னை: குல்லா அணிந்து அடுத்தடுத்து வீடுகளில் கைவரிசை காட்டிய கும்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த தாம்பரத்தில் நள்ளிரவில் தலையில் குல்லா அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபடும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த சும்சுதீன் என்பவர் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை போனது. இதேபோல், ராஜேஷ் என்பவரது வீட்டிலும் இருசக்கர வாகனம் திருடு போனது. இதேபோல் குரோம்பேட்டையிலும் பெருமாள் என்பவரது வீட்டில் 12 சவரன் நகையை இதே கும்பல் திருடி சென்றுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, இரவு நேரத்தில் சிலர் தலையில் குல்லா அணிந்து கொள்ளையில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Night
Day