சென்னை: இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல் - இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வடபழனியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். வடபழனியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த புதன்கிழமை தனது தங்கையுடன் பஜனை கோவில் தெரு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர், இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்து, தப்பியோடினார். இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கோடம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்தனர். 

Night
Day