சென்னை : ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை : 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை காசிமேட்டில் ரவுடியை வெட்டி படுகொலை செய்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காசிமேடு பவர் குப்பத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர்மீது அடிதடி உட்பட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நேற்றிரவு அதே பகுதியில் நடந்து சென்ற போது, 5 பேர் கொண்ட கும்பலுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் வெங்கட்ராமனை துரத்தி சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை போலீசார் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day