சீனா: 15வது மாடியில் இருந்து 2 குழந்தைகளை வீசி கொலைசெய்த தம்பதிக்கு தூக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனாவில் 15-வது மாடியில் இருந்து 2 குழந்தைகளை தூக்கி வீசி கொலை செய்த தம்பதிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சீனாவின் சோக்கிங் பகுதியில் வசித்து வந்த சாங் போ, அவரது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற நிலையில் 2 வயது பெண் குழந்தை மற்றும் ஒரு வயது ஆண் குழந்தையுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இந்நிலையில் மற்றொரு பெண்ணுடன் சாங்போவிற்கு தொடர்பு ஏற்படவே, திருமண வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக கருதி 2 குழந்தைகளையும் 15-வது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசி கொலை செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவருக்கும் நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நிலையில், இருவருக்கும் இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

Night
Day