க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்வபுரத்தில் ரைஸ் மில் நடத்தி வரும் ராமச்சந்திரன் என்பவரது வீட்டின் கதவு நீண்டநேரம் திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, ராமச்சந்திரன், அவரது மனைவி விசித்ரா, மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடல்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்கள் கடன்தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...