கோவை : பிரதமர் நிகழ்ச்சியில் மாணவர்கள்-பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரத்தில், தனியார் பள்ளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.கவினர், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அவர்களுடன் பள்ளி சீருடை அணிந்த மாணவ-மாணவிகளும் வரிசையாக நின்றுள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டும், பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்க செய்துள்ளதாக தனியார் பள்ளி மீது புகார் எழுந்தது. இந்நிலையில், குழந்தைகள் நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. 

Night
Day