கோவை : உயர்ரக செல்போன்கள், பணத்தை திருடிய இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 கோவை மாவட்டம் அன்னூரில் செல்போன் கடையின் சுவற்றில் துளையிட்டு இளைஞர் ஒருவர் உயர்ரக செல்போன்களை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அன்வர் அலி என்பவர் அன்னூர் பேருந்து நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். இரவு நேரத்தில் இவரது கடையின் சுவற்றில் துளையிட்டு புகுந்த இளைஞர், உயர்ரக செல்போன்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே அன்னூர் - கோவை சாலையில் போலீசார் ரோந்தில் ஈடுபட்டபோது, திருட்டில் ஈடுபட்ட மணிகண்டன் என்ற இளைஞரை கைது செய்தனர்.

Night
Day