கேரளா: மதுபோதையில் தாயை கட்டிவைத்து எரித்து கொன்ற மகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளா அருகே மதுபோதையில் தாயை கட்டிவைத்து எரித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். ஆனப்பாறை பகுதியை  சேர்ந்த நளினி என்பவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன், மோசஸ்பிபின் மதுபோதையில் வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் மதுபோதையில் இருந்த அவர், பெற்ற தாயை கட்டிலில் கட்டி வைத்து எரித்து கொன்று தப்பியுள்ளார். பின்னர் நீண்ட நேரம் கழித்து இளைய மகன் வீட்டிற்கு சென்றபோது, தாய் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day