கேரளாவில் இருந்து கள்ளத்துப்பாக்கியை வாங்கி வந்து தமிழகத்தில் விற்க முயன்ற 4 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் இருந்து கள்ளத்துப்பாக்கியை வாங்கி வந்து தமிழகத்தில் விற்க முயன்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவில் அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கள்ளத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் இருப்பதை கண்ட போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள், கேரளாவில் இருந்து தூப்பாக்கியை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்விருந்தது தெரியவந்தது.

Night
Day