குமரி: சொத்து தகராறு - தாயை கழிவு நீர் குழிக்குள் தள்ளி தாக்குதல் நடத்திய மகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குமரி மாவட்டம் ஆலங்கோடு அருகே மகன் தனது வயது முதிர்ந்த தாயாரை கழிவு நீர் குழிக்குள் தள்ளி தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் 73 வயதான வள்ளியம்மா. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் லாரன்ஸ்க்கும் இளைய மகனுக்கும் இடையே சொத்து தகராறு நடந்து வருவதாக கூறப்படுகிறது.. இந்த நிலையில், வீட்டின் பின்புறத்தில் குளித்துக்கொண்டிருந்த வள்ளியம்மாவை மகன் லாரன்ஸ், கழிவு நீர் குழிக்குள் தள்ளி விட்டு தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை அவரது இளைய மருமகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.. இது தொடர்பாக நித்திரவிளை காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day