க்ரைம்
விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பாலீஷ் போட்டு தருவதாக கூறி பெண்களிடம் நகை பறித்த இரு வடமாநில வாலிபர்களை போலீசார் சிறையில் அடைத்தனர். நைனார்பாளையம் பகுதியில் இரண்டு பேர் 4 வீடுகளுக்கு சென்று அங்கிருந்த பெண்களிடம் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி தங்கம், வெள்ளி நகைகளை வாங்கி போலி நகைகளை கொடுத்து விட்டு சென்றுள்ளனர். இதனிடையே அந்த நகைகள் போலி என அறிந்த அவர்கள், பேருந்து நிலையத்தில் நின்றிருந்தவர்களை பிடித்து கீழ்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்ததில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்பு குமார் மற்றும் அமர்குமார் என்பதும், தங்க நகைகளுக்கு பாலீஸ் செய்து தருவதாக கூறி நகைகளை அபறிக்கும் கும்பல் எனப்தும் தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...