கரூர்: மரத்தில் கட்டி வைத்து அடித்து மகனை கொலை செய்த தந்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம் ஜெகதாபி பகுதியில் மகனை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த தந்தை உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெகதாபி பகுதியைச் சேர்ந்த மனோகரன் வீட்டின் எதிரே அவரது தந்தை வீடு கட்டுவது தொடர்பாக இருவருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை மாணிக்கம், தனது மகள் வயிற்று பேரன் மணிராஜூடன் சேர்ந்து மனோகரனை மரத்தில் கட்டி வைத்து அடித்ததில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து மனோகரன் விபத்தில் இறந்ததாக கூறி உடலை அடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து மனோகரன் மனைவி சுதா அளித்த புகாரின்படி வெள்ளியணை போலீசார் மாணிக்கம், மணிராஜ் இருவர் மீதும் வழக்கு பதிந்து, கைது திருச்சி சிறையில் அடைத்தனர்.

Night
Day