ஈரோடு: சட்டவிரோதமாக மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோட்டில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சத்தியமங்கலம் அருகே உள்ள புது இலயாம்பாளையத்தில் சுப்பிரமணி என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். இதேபோல், புளியம்பட்டி பகுதியிலும் சட்டவிரோதமாக மது விற்ற சாந்தாமணி என்ற பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 120 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Night
Day