இலவச வீட்டு மனை பட்டா வழங்க ரூ. 40,000 லஞ்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மண்டகொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற விவசாயி, 2 இலவச வீட்டு மனைக்களுக்கு பட்டாவேண்டி மண்டகொளத்தூர் கிராம நிர்வாக அலுவலரை அணுகியுள்ளார். அப்போது 2 பட்டாவுக்கும் தலா 40 ஆயிரம் ரூபாய் வீதம் 80 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் பட்டா வழங்குவதாக விஏஓ இருளப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரில், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறை அளித்த ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய 40 ஆயிரம் ரூபாயை விஏஓவிடம் கணேசன் கொடுத்துள்ளார். அப்போது மறைந்ததிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருளப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Night
Day