ஆரணி : அடுத்தடுத்து 2 வீடுகளில் 17 சவரன் கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 17 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆரணி கொசப்பாளையம் பகுதியில் வசித்து வரும் தலைமையாசிரியர் மூர்த்தி-ஆசிரியை கோசலை தம்பதியினர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டனர். இவர்களது வீட்டு மாடியில், மகளிர் குழு ஓருங்கிணைப்பாளர் புஷ்பலதா வாடகைக்கு இருந்து வருகிறார். இந்த வீடுகளில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள், வீடுகளின் பூட்டை உடைத்து 17 சவரன் தங்க நகைகள், மற்றும் 6 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். இது குறித்து தலைமையாசிரியர் அளித்த புகாரின் போரில் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Night
Day