எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10 -ம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி டவுன் கோட்டை வீதியில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சுந்தரரீகப்பட்டு கிராமத்தை சேர்ந்த மேகநாதன் என்பவரின் மகன் சதீஷ்குமார் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் கலேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வசீகரன் என்பவருக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வழக்கம் போல் அரசு பேருந்தில் பள்ளிக்கு வந்த சதீஷ்குமாரை, வசீகரன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சதீஷ் குமார் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காயமடைந்த வசீகரனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். விளம்பர திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களிடையே மோதல் கலாச்சாரம் அதிகரித்துள்ள சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.