எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி பள்ளியிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் பிரித்திகா என்ற மாணவி இறந்து கிடப்பதாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலறிந்த போலீசார் உயிரிழந்த மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதிக்குட்பட்ட அரசு மாதிரிப் பள்ளியில், பனிரெண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி பள்ளி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மாணவி உயிரிழந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.