அஜித் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

எழுத்தின் அளவு: அ+ அ-

போலீஸ் காவலில் உயிரிழந்த மடப்புரம் காவலாளி அஜித்தின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க சென்னை உயர்நீதிமனன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரணத்தை அடுத்து,  இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் கேட்டும், கொலை வழக்கு  தொடர்புடைய காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும், சாட்சியங்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசு தரப்பில், வழக்கின் சாட்சியான சக்தீஸ்வரனுக்கு ஆயுதம் ஏந்திய 2 காவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அஜித்குமாரின் குடும்பத்திற்கு 7.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சட்டவிரோத காவலில் உயிரிழந்த மடப்புரம் காவலாளி அஜித்தின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் சாட்சிகளான நவீன், அருண், சக்திஸ்வரன், பிரவீன் ஆகியோருக்கு பாதுகாப்பு கோரிய மனுவை முதன்மை நீதித்துறை நடுவர் 7 வேலை நாட்களுக்குள்ளாக விசாரித்து பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்னர். 

கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Night
Day