மலேசியாவில் நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதல் - 10 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மலேசியாவில் கடற்படை ஒத்திகையின் போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். 

மலேசிய கடற்படையின் 90வது ஆண்டு தினத்தையொட்டி மலேசியாவின் பெரக் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வானில் சாகசம் பயிற்சி மேற்கொண்ட இரு ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், 2 ஹெலிகாப்டர்களும் நடுவானிலேயே சுக்கு நூறாக நொறுங்கி சிதறியது.

இந்த, பயங்கர விபத்தில் சிக்கி கடற்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனிடையே, 2 ராணுவ ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day