பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சமூக சேவை, போன்ற அனைத்து துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பானவைகளுக்காக மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இதில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

இதேபோன்று, விளையாட்டு துறையில் டென்னிஸ் வீரர் போபண்ணாவுக்கு பத்ம ஸ்ரீ விருதும், பின்னணி பாடகி உஷா உதுப்புக்கு  பத்மபூஷன் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


Night
Day