பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் 40 லட்சம் பேருக்கு டெங்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் 40 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஏடிஸ், எஜிப்டி வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 லட்சம் பேருக்கு டெங்கு பரவிய நிலையில் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Night
Day