சீனாவில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பெய்த கனமழையால் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் மீலாங் விரைவு சாலையின் 17 புள்ளி 9 மீட்டர்பகுதி அதிகாலை 2 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த 18 கார்கள் சரிவில் சிக்கி கீழே விழுந்தன. தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் இறந்தவர்கள் உடல்களை மீட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Night
Day