சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கிய 19-ம் நூற்றாண்டை சேர்ந்த கப்பல் கண்டுபிடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான கப்பல் ஒன்று கனடா நாட்டின் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது, உள்ளூர்வாசிகளையும், அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. சுமார் 80 அடி நீளமுள்ள இந்த கப்பல், நியூ ஃபவுண்ட்லேண்ட்டில் உள்ள கேப்ரே கடற்கரையில் கடந்த 20ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி இந்த கப்பல் 19ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும், கடலில் ஏற்பட்ட திடீர் சூறாவளி தாக்குதலால், கப்பல் மூழ்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

Night
Day