ஈரான் கிளஸ்டர் குண்டுகளை வீசி தாக்குதல் - இஸ்ரேல் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிளஸ்டர் குண்டுகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- ஈரான் மோதல் இன்று 8வது நாளாக தொடர்கிறது. இந்தநிலையில், இஸ்ரேல் மீது ஈரான் கிளஸ்டர் குண்டுகளை வீசியுள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஒரு வாரமாக நடக்கும் போரில் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியது இதுவே முதல் முறையாகும்.

ஏவப்படும் கிளஸ்டர் குண்டுகள் 7 கிலோ மீட்டர் உயரத்தில் திறந்து, 8 குண்டுகளாக மாறும் என கூறப்படுகிறது. இந்தநிலையில், ஈரான் அனுப்பிய கிளஸ்டர் குண்டுகள் மத்திய பகுதியில் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எனினும் இதில், எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

கடந்த 2008ம் ஆண்டு கிளஸ்டர் ஏவுகணைகளை பயன்படுத்த தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் 111 நாடுகள் கையெழுத்திட்ட நிலையில், ஈரான், இஸ்ரேல் அதனை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், தற்போது சர்ச்சைக்குள்ளான கிளஸ்டர் குண்டுகள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day