3 மாநிலங்களில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார், ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு, பல்வேறு திட்ட தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாக்களில் பங்கேற்க உள்ளார்.

பீகாரில் உள்கட்டமைப்பு மற்றும் பொது சேவைகளை மையமாகக் கொண்ட பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார். சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான வைஷாலி- தியோரியா புதிய ரயில் பாதையை அவர் தொடங்கி வைக்க உள்ளார். கூடுதலாக, வடக்கு பீகார் முழுவதும் இணைப்பை மேம்படுத்தும் வகையில், முசாபர்பூர் மற்றும் பெட்டியா வழியாக பட்லிபுத்ரா மற்றும் கோரக்பூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் பிரதமர் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மின்சாரம், PMAY–நகர்ப்புற திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

ஒடிசா மாநிலத்தில், குடிநீர், நீர்ப்பாசனம், விவசாயம், சுகாதாரம், சாலை உள்கட்டமைப்பு மற்றும் ரயில்வே போன்ற துறைகளை உள்ளடக்கிய 18 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 11வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் தலைமை தாங்குகிறார். கடற்கரையில் நடைபெறும் யோகா கூட்டத்தில் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Night
Day