ஆப்கானிஸ்தானில் கனமழை - பெருவெள்ளத்தில் சிக்கி 33 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆப்கானிஸ்தான் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். கடந்த 3 நாட்களாக ஆப்கானிஸ்தான் நாட்டில் பெய்து வந்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றிலும் அழிந்தன. மேலும் நாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததாகவும், 20 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் 33 பேர் உயிரிழந்ததாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல மாகாணங்களில் மக்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

Night
Day