தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 92 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 92 ஆயிரத்து 320 ரூபாய்க்கும், கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து 11 ஆயிரத்து 540 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், தங்கத்திற்கு போட்டியாக நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வெள்ளி விலை 3 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 171 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 3 ஆயிரம் ரூபாய் குறைந்து 1 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

Night
Day