3 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம், புதிய புத்தகங்கள் : சிபிஎஸ்இ அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 வரும் கல்வியாண்டில் 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாட புத்தகங்கள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த சிபிஎஸ்இ இயக்குநர் ஜோசப் இம்மானுவேல், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்க உள்ள புதிய கல்வியாண்டில் இருந்து, 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம், புதிய பாட புத்தகங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிடுகிறது என்று குறிப்பிட்டார். இதற்கான பணி நடந்து வருவதாகவும், விரைவில் புதிய புத்தகங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். 

varient
Night
Day