சென்னை : ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர், ஒரேநாளில் உரிய ஆவணங்களின் கொண்டுவரப்பட்ட 11 கோடியே 41 லட்சம் ரூபாய் ரொக்‍கம் மற்றும் ஏராளமான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நேற்று மாலை தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தியாகராய நகர், ஜி என் செட்டி சாலை பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் 9 கிலோ எடையுள்ள தங்க வளையல்கள் மற்றும் தங்க நகைகள் இருந்துள்ளது. என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள தங்க நகை கடைக்கு கொண்டு செல்வதாக கார் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 5 கோடி மதிப்புள்ள 9 கிலோ நகைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

Night
Day