ஹேமந்த் சோரன் கைது வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹேமந்த் சோரன் கைது வழக்கில் அமலாக்கத்துறை  2 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டவிதிகளின் படியே ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறையும், சட்டத்தை மீறி கைது செய்துள்ளதாக சோரன் தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் 2 வாரங்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Night
Day