ஹரியானா - பஞ்சாய் எல்லையில் போலீஸ் தடியடி : உயிரிழந்த இளம்விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போராட்டத்தின் போது உயிரிழந்த இளம் விவசாயி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் - ஹரியானா எல்லையில் பேரணி சென்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஷம்பு - கனவுரி எல்லையில் தடுப்புகளை மீற முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, சுப்கரன் சிங் என்ற இளம் விவசாயி உயிரிழந்தார். இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், பலியான விவசாயியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Night
Day