வரும் ஏப்ரல் 4ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய 29வது கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூடுகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டத்துக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அழைப்பு விடுத்துள்ளார். ஏப்ரல் 4-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்துக்கு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில  அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு 2.8 டி.எம்.சி. நீரை திறக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பெங்களூரு குடிநீர் தேவைக்காக, காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வேண்டும் என கர்நாடகா கோரிக்கை வைத்துள்ளது. கர்நாடகாவின் இந்த கோரிக்கைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெற உள்ள  கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Night
Day