100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதிய உயர்வுக்கு ராகுல் கிண்டல் பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தை 294 ரூபாயிலிருந்து 319 ஆக மத்திய அரசு உயர்த்தியதை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டலாக பேசியுள்ளார்.  இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள்  அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும், பிரதமர் உங்களின் சம்பளத்தை இவ்வளவு உயர்த்துவார் என எதிர்பார்க்கவில்லை என கிண்டலாக பதிவிட்டுள்ளார். மேலும், இவ்வளவு பெரிய தொகையை வைத்து என்ன செய்ய போகிறீர்கள் என பிரதமர் உங்களை நிச்சயம் கேட்பார் என்றும், சம்பளம் உயர்த்தியதற்கு 700 கோடியில் விளம்பரத்துக்காக செலவு செய்வார்கள் என்றும் சாடினார்.

Night
Day