மகாராஷ்டிரா: ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த பயணி! - நிலைதடுமாறி விழுந்த சிசிடிவி காட்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிர மாநிலம் புனே ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியை ரயில்வே பணியாளர் மற்றும் போலீசார் நூலிழையில் காப்பாற்றிய வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது. ரயில் நிலையங்களில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பான காட்சிகளை வெளியிடும் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து ரயில் பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் புனே ரயில்நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர், ஓடும் ரயில் ஏற முயற்சித்தபோது நிலைதடுமாறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே தவறி விழுந்தார். இதனை கண்ட ரயில்வே பணியாளர் மற்றும் ரயில்வே போலீசார் நொடிப்பொழுதில் அந்த பயணியை மீட்டனர்.

Night
Day