பா.ஜ.கவில் இணைந்த இந்தியாவின் மிகப்பெரும் பணக்கார பெண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரரான இந்தியாவின் மிகப்பெரும் பணக்கார பெண்ணான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ஹரியானா மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான சாவித்ரி ஜிண்டால், தான் காங்கிரஸ் கட்சியில் வகித்து வரும் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று இரவு எக்ஸ் தளத்தில் அறிவித்தார். இன்று சாவித்ரி மற்றும் அவரது மகள் சீமா ஜிண்டால் இருவரும் பாஜக தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அண்மையில் சாவித்ரி ஜிண்டாலின் மகனும், முன்னாள் எம்பியுமான நவீன் ஜிண்டால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day