சென்னை: பணிநேரத்தில் அரசு வாகனத்தில் அமர்ந்து மது அருந்திய மின்வாரிய அதிகாரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பணி நேரத்தின் போது அரசு வாகனத்தில் அமர்ந்து மது அருந்தி அத்துமீறலில் ஈடுபட்ட மின்வாரிய அதிகாரி குறித்த கைப்பேசி பதிவு காட்சிகள் வெளியாகியுள்ளது. 

சென்னை திருவொற்றியூர் மின்வாரிய அலுவலகத்தில் ஏ.இ.யாக பணிபுரியும் ஏழுமலை என்பவர் பணி நேரத்தில், அரசு வாகனத்தில் அமர்ந்தவாறு மது அருந்தியுள்ளார். அப்போது சக அதிகாரி, பணி நேரத்தில் மது அருந்துவது குறித்து கேட்டதற்கு, அவரை ஏளனமாக பேசிவிட்டு தொடர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர், காருக்கு வெளியே நின்ற ஒருவரிடம் காலி பாட்டிலை கொடுத்து கீழே வீசுமாறு கூறியுள்ளார். இந்த கைப்பேசி பதிவு காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day