ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தடை கோரி பொதுநல வழக்‍கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தடை கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடவே பாரதிய ஜனதா கட்சி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வசிக்கும் போலா தாஸ் என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கோயில் இன்னும் கட்டுமானத்தில் உள்ளது என்றும் தெய்வத்தின் பிரதிஷ்டை சனாதன மரபுக்கு முரணாக இருப்பதால் அது நடக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார். 

varient
Night
Day