திருச்சி: ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 பேர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறுவன் உட்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர். பாலக்குறிச்சி அருகே ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளின் திமிலை இறுகப் பற்றி, இளம் காளையர்கள் வெற்றி வாகை சூடினர். இதில் வெற்றி பெற்ற காளைக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயம், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த ஏராளமான மக்கள், கைகளைத் தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

Night
Day