திண்டுக்கல்: திமுக ஊராட்சிமன்ற துணைத் தலைவரை கட்டி வைத்து தர்மஅடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் வடமதுரையில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக ஊராட்சிமன்ற துணைத் தலைவரைக் கட்டி வைத்து, ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்தனர். வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே வளவிசெட்டியப்பட்டியில் உள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக திமுக துணைத் தலைவர் எம்.எல்.சுப்பிரமணி மீது பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தங்கராஜ்-செல்வி தம்பதியரின் மகளுக்கு நேற்று திமுக ஊராட்சிமன்ற துணைத் தலைவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதை அறிந்த ஊர் மக்கள் ஊராட்சிமன்ற துணைத் தலைவரை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர் மீது போக்சோ சட்டம் பாய்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Night
Day