மே.வங்கத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சந்தேஷ்காளி சம்பவத்தை தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு தேசிய பட்டியலின ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரின் உதவியாளர்கள், சந்தேஷ்காளி கிராமத்தைச் சேர்ந்தவர்களின் நிலங்களை பறித்து கொண்டதுடன் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக  
தேசிய பட்டியலினத்தவர் ஆணைய குழுவினர் சந்தேஷ்காளி கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். இதை தொடர்ந்து பட்டியலினத்தவர் ஆணைய குழுவினர் குடியரசுத் தலைவர் முர்முவிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளனர். அதில் மேற்கு வங்கத்தில் நிலைமை மோசமாக இருப்பதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளனர். 

varient
Night
Day