மூணாறு : தமிழக வாகனம் கவிழ்ந்து விபத்து - ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா சென்ற மினி பேருந்து சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 1 வயது குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேனியில் இருந்து மூணாறுக்கு சென்று கொண்டிருந்த மினி பேருந்து, மாங்குளம் இரும்பு பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் குணசேகரன், மூர்த்தி, தன்விக், சேது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவலறிந்த இடுக்கி மாவட்ட ஆட்சியர் சீபா ஜார்ஜ் மருத்துவமனைக்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டார்.

varient
Night
Day