ஊடகத்துறையினர் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடைபெற உள்ள மக்‍களவை தேர்தலில் வாக்குப்பதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்‍கையில், தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரியும் ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல ஆண்டாக கோரிக்கை விடுத்தனர் என்றும், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மக்‍களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட உள்ளன.

Night
Day