தேர்தல் எதிரொலி - சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு ஜூன் மாதம் 16 ஆம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன. இதற்கிடையே, நடப்பாண்டின் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு மே 26ம் தேதி நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு ஜூன் 16ம் தேதி நடத்தப்படும் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Night
Day