மும்பை குண்டுவெடிப்பு வழக்கு - 12 பேரும் விடுதலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 12 பேரை விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பையின் புறநகரில் உள்ள 7 ரயில்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 188 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2015ம் ஆண்டு, இதில் 5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தினசரி அடிப்படையில் நடந்து வந்த இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், 12 பேர் மீதான தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பி முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Night
Day